இருப்பதால் கொடுக்கிறான்
ஒருவன்
இயன்றதை கொடுக்கிறான்
ஒருவன்
கொடுத்தல் என்பது
நிகழத்தான் செய்கிறது
மனிதர்களாலும்
மனிதர்களை போன்றோராலும்
அடிபட்ட இடத்தில்
அலட்சியம் செய்தவன்
அன்பளிப்பு செய்கிறான்
ஆஸ்பத்திரிக்கு
தீராப்பசியில்
தின்றுகொண்டிருந்தவன்
அருகில் வந்த நாய்க்கும்
அமரவைத்து சோறு போட்டான்
ஆகாயம் தாங்காத மேகங்கள் இல்லை
மேகங்கள் பொய்த்தால் ஈரங்கள் எங்கே?
வலிகளை சுமக்கின்ற காதல்கள் தானே
புதுமைகள் சொல்லும் புரட்சிகள் மூட்டும்
வலிகளை ஏற்று தோள்களில் தாங்கு
மேகத்தை போன்று தூரத்தில் இல்லை
காதலின் வெற்றி கைக்கெட்டும் நீளம்..
நாளையிளந்த சின்ன பூக்கள்
நாட்டையாளுமாம்
என்று கூவிக்கூவியே
நாட்டை கூறு போடுறார்
என்று தீரும் பொய்முகங்கள்
போடும் கூத்துக்கள்
அன்று பொழியும் இங்கு வந்து
மாரிமேகங்கள்!